பாஜக-வினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநரை இன்று தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து பேசினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, சென்னை சைதாப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கேள்வி கேட்க, அவரை பாஜக ஆதரவாளர்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவியது.


இதைத்தொடர்ந்து, பாஜக ஆதரவாளர்களால் இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பாஜக-வினர் கடுமையாக தாக்கியதாகவும், தாக்கப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வந்தது.


இந்நிலையில் தற்போது, இச்சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறப்பட்டு வரும் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டிற்கே நேரில் சென்று தமிழிசை அவர்கள் நலம் விசாரித்துள்ளார். இந்த வீடியோவினை அவர் தனது ட்விட்டர் பக்கதிலும் பகிர்ந்துள்ளார்.