தமிழகத்தில் கடந்த மே 15ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 28ம் தேதி வரை நடைபெற்றது.  கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியாக நடைபெறாமல் இருந்த பள்ளிகள் மற்றும் தேர்வுகள் இந்த ஆண்டு சரிவர நடத்தப்பட்டது.  இந்த ஆண்டு 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.  மொத்தம் 3,119 தேர்வு மையங்களில் இந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - முக்கிய தலைவர் பேச்சால் சலசலப்பு!


இந்நிலையில் ஜூன் 20ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அன்றைய தினமே வெளியானது.  12-ம் வகுப்பில் மொத்தம் 93.76 சதவிகித பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.  தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் மாணவியர் 96.32%, மாணவர்கள் 90.96% தேர்ச்சி அடைந்தனர்.  



தற்போது அரசு தேர்வுத்துறை அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் +2 பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும். இதனை பள்ளிகளிலும், தேர்வு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்வையிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | துருக்கி அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் சென்னையை சேர்ந்த பெண்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ