போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் கோவை புறநகரில் இருந்து பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 25 போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து கோவை புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இன்று காலை பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என டிப்போ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 4 மணி முதல் நகர பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போதிய ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முரசொலி நில சர்ச்சை: வழக்கின் தீர்ப்பு தேதியை குறித்த சென்னை உயர்நீதிமன்றம்



இந்த நிலையில் அதிகாலை போக்குவரத்து பணிமனைகள் முன்பாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். " நேற்று இரவில் செல்ல வேண்டிய 26 பேருந்துகள் வழக்கம்போல் சென்றது.  அதே போல இன்று கோவை மாவட்டத்தில் வழக்கம்போல 951 அரசு பேருந்துகளும் இயக்கப்படும்.  தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் பட்டியலில் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள். கோவையில் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி போக்குவரத்து சேவை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று போக்குவரத்து பொது மேலாளர் ஶ்ரீதரன் கூறி உள்ளார்.


மேலும் சென்னையில் போலீசார் பாதுகாப்போடு வழக்கமான 3200 பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.  தமிழகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்புடன் தற்காலிக ஊழியர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  நேற்று இரவு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஐ.என்.டி.யூ.சி. பங்கேற்காது என்று ஐ.என்.டி.யூ.சி. முதன்மை பொதுச்செயலாளர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.  மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இருந்து விலகுகிறோம் என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.



தமிழ் நாடு அரசு போக்குவரத்து நிறுவன ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.  வழக்கறிஞர் பா. ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.  பொங்கல் பண்டிகை காலங்கள் நெருங்கி வரக் கூடிய சூழலில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பது சட்டவிரோதம். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், எனவே போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் இந்த வழக்கை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையீடு செய்தார்.  இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இன்று இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும்: அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ