துரோணாச்சாரியர் விருது பெற்றுள்ள மேசைப்பந்து விளையாட்டு பயிற்சியாளர் A.சீனிவாச ராவ் அவர்களுக்கு தமிழக முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேசைப்பந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளரான திரு. A.சீனிவாச ராவ் அவர்களுக்கு மத்திய அரசு துரோணாச்சாரியர் விருது வழங்கியதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று திரு. A.சீனிவாச ராவ் அவர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.


இக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...


"அன்புள்ள திரு. சீனிவாச ராவ் அவர்களுக்கு,


சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு மேசைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து, இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வீரர், வீராங்கனைகளை உருவாக்கிய தங்களுக்கு இந்திய அரசு துரோணாச்சாரியர் விருது வழங்கி கௌரவித்துள்ளதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.


தாங்கள் மேசைப்பந்து போட்டிகளில் மேன்மேலும் பல வீரர்களை உருவாக்கி, சாதனை படைத்திட எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்!