கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் இன்று நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்படுள்ள நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. புயலின்போது சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றுவது, புதிய மின்கம்பங்கள் நடுவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


இப்பணிகள் இன்னும் நிறைவடையாததாலும், பள்ளிக்கூடங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அகற்றப் படாததாலும் கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. 


அதன்படி, நாகை, புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்போல் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.