கடந்த மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை SSLC பொதுத் தேர்வு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதியுள்ளனர்.   இந்த தேர்வின் முடிவை இன்று காலை 9.30 மணிக்கு www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மாணவ, மாணவியர் தெரிந்துகொள்ளலாம். 


தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த மொபைல் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த மொபைல் எண்ணிற்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?


1. tnresults.nic.in என்ற இணையதள பக்கத்துச் செல்லவும்.


2. TN SSLC Result 2019, TamilNadu Result 2019 எனத் தேர்வு செய்யவும்.


3. தேர்வு பதிவு எண்ணை பதிவிடவும்.


4. பிறந்த தேதி பதிவிடவும்.


5. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்.