சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சீனா என்கின்ற சீனிவாசன் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்த போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5பேர் கொண்ட மர்ம நபர்கள் சீனிவாசனை இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து, புதுவண்ணாரப்பேட்டை மாதா கோவில் தெருவில் ஓட ஓட விரட்டி கத்தியால் தலையில் வெட்டி விட்டு ஐந்து பேர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


ALSO READ | கணவரை கொன்று டிரம்பில் உடலை அடைத்து வைத்த மனைவி!


கொலை நடந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் பார்வையிட்டு. குற்றவாளியை தேடும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-


நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த பசுபதி வயது 18 என்பவரை சீனிவாசன் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டி உள்ளனர். ஆபத்தான நிலையில் பசுபதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு பழை வாங்கும் விதமாக, பசுபதியின் உறவினர் மற்றும் மூன்று பேர் சேர்ந்து சீனிவாசன் தனியாக வந்த போது அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.


 இதுதொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ALSO READ | காவல் நிலையம் அருகே கொள்ளையர்களின் கைவரிசை: அழகாபுரத்தில் பரபரப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR