எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்படுவது தமிழக அரசின் கையில் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையில் அமைக்கப்பட்டு வரும் உயர்தர வசதிகளுடன் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கட்டட பணிகளை தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். 


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஜூலை மாதம் மக்கள் பயன்பாட்டு வரும் என்றார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்படுவது தமிழக அரசின் கையில் இல்லை என்றும், எய்ம்ஸ் அமைவதற்கான இடத்தை மத்திய அரசு தான் தேர்வு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.  


மேலும், நோயாளிகளிடம் அன்பாக நடந்துகொள்ள மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.