“குடி குடியை கெடுக்கும்” என்று கூறுவார்கள் அதாவது மது பழக்கம் உயிரை குடிப்பதோடு அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களது வாழ்வையும் நாசமாக்கிவிடும். “மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு” என்று எச்சரிக்கை ஆங்காங்கே இருந்தாலும் குடியை விட தயாராக இல்லாததால், உயிரை விடும் சம்பவங்கள் கவலைகளை அதிகரிக்கின்றன. தற்போதைய சூழலில் வசதி படைத்தவர்களை காட்டிலும் பொருளாதார நிலையில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களே அதிகம் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். சம்பாதித்த பணத்தை, மதுக்கடைகளில் செலவழித்து விட்டு, தங்கள் குடும்பத்தாரை பட்டினியில் போடுவதுடன், வீண் தகராறிலும் ஈடுபடுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல குடும்பங்களில், தங்கள் குழந்தை என்ன வகுப்பு படிக்கிறது என்பது கூட தெரியாத அப்பாக்கள் குடிக்கு அடிமையாகி இருக்கின்றனர். கட்டுப்பாடின்றி நாள் தோறும் மது அருந்துவதால் மனநிலை பாதிக்கப்பட்டு குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். இந்த தகராறு சில நேரங்களில் எதிர்பாராத விதமாகவே அல்லது அந்த நொடியில் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தின் காரணமாகவோ கொலைகளில் முடிவது அதிகரித்து வருகிறது. 


பூந்தமல்லி அடுத்த கன்டோன்மென்ட் ரைட்டர் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்(40). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மனைவியை பிரிந்து தம்பிகள் மணி(35), குமார்(30), மற்றும் தாயுடன் வசித்து வந்தார். கணேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவும் இதேபோல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கணேஷ் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


மேலும் படிக்க | குடி குடியை கெடுக்கும்; மது பழக்கம் உயிரை குடிக்கும்


மேலும், ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார். தடுக்க வந்த தம்பிகள் இருவரையும் கணேஷ் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணியும், குமாரும் வீட்டில் இருந்த கத்தரிக்கோல் மற்றும் கத்தியை கொண்டு கணேஷ் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து துடி துடித்து சம்பவ இடத்திலேயே கணேஷ் உயிரிழந்தார். 



தகவலறிந்து வந்த போலீஸார் கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த தம்பிகள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட அண்ணனை தம்பிகள் இருவர் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | போதையில் போலீசையே கல்லால் அடித்த பெண் -வீடியோ!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR