நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கும், தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.  எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றனர். வீடுகளை இழந்த பலர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.