நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 40 மக்களவைத் தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின்  2 ஆம் கட்ட வேட்பாளர்கள் வருகிற 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.  


மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் விவரம்: 


திருவள்ளூர் - லோகரங்கன்


சென்னை வடக்கு - ஏஜி மவுரியா


மத்திய சென்னை - கமீலா நாசர்


ஸ்ரீபெரும்பதூர் - சிவக்குமார்


அரக்கோணம் - ராஜேந்திரன்


வேலூர் - ஆர். சுரேஷ்


கிருஷ்ணகிரி - ஸ்ரீகாருண்யா


தருமபுரி - வழக்கறிஞர் ராஜசேகர்


விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி


சேலம் - மணிகண்டன்


நீலகிரி - வழக்கறிஞர் ராஜேந்திரன்


திண்டுக்கல் - டாக்டர் எஸ்.சுதாகர்


திருச்சி - வி.ஆனந்தராஜா


சிதம்பரம் - டி.ரவி


மயிலாடுதுறை - ரிபாஃயுதீன்


நாகை - கே.குருவையா


தேனி - ராதாகிருஷ்ணன்


தூத்துக்குடி - டி.டி.எஸ் பொன்குமரன்


நெல்லை - என்.வெண்ணிமலை


குமரி - எபிநேசர்


புதுச்சேரி - எம்.ஏ.எஸ் சுப்ரமணியன்



முதற்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வரும் 24 ஆம் தேதி அறிவிக்கப்படுவதாகவும், 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் சில முக்கியமானவர்கள் பெயரும் இடம் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.