சேலம் மாவட்டம், சின்னதிருப்பதி பிரசன்ன வெங்கட்ராமண சுவாமி திருக்கோவிலில் நேற்று ஐந்தாம் சனிகிழமையை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை அடுத்துள்ள சின்னதிருப்பதியில் பிரசன்ன வெங்கட்ராமண சுவாமி திருக்கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.



இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க மக்கள் திரலாக வந்து வழிபடுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் நேற்று புரட்டாசி ஐந்தாம் சனிகிழமையை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 


இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனார்!