சேலம் பெரியார் பல்கலை., மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலை., -க்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர்கள் இன்று தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக, கோவை பாரதியார் பல்கலை இயற்பியல் பேராசிரியராக இருந்த, குழந்தைவேலு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார், அதேப்போல் திருச்சி பாரதிதாசன் பல்கலை., துணைவேந்தராக, காரைக்குடி அழகப்பா பல்கலை வேதியல் துறை பேராசிரியராக இருந்த, பி.மணிசங்கர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர்களது பதவி காலம் செல்லுபடியாகும் என நேற்று, ஆளுனர் மாளிகை செய்திகுறிப்பு வெளியிட்டது.


இந்நிலையில் இன்று சேலம் பெரியார் பல்கலை., மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலை., -க்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர்கள் இன்று தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!