சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று முதல் முறையாக காலை 11 மணிக்கு தலைமை செயலகம் வர உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரப்பரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 18-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார்.
 
இந்நிலையில் இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் முக்கிய கோப்புக்கள் சிலவற்றில் கையெழுத்திட உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. 


இதனால் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தலைமை செயலகம் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று முக்கிய அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.