ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் விடுமுறை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 


மொத்தம் 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் இன்று இரவு முதல் நாளை வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என்றும், விடுமுறை முடிந்த பின் ஞாயிற்றுக்கிழமையும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.