ரஜினிகாந்த் இலங்கை செல்வதில் எந்த தவறும் இல்லை என பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் சுமார் 150 வீடுகள் கட்டப்பட்டு, அவை தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் விழா யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அந்த நிகழ்விற்கு நடிகர் ரஜினிகாந்த் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், வீடுகள் வழங்க ரஜினிகாந்த் இலங்கை செல்வதில் எந்த தவறும் இல்லை என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.