திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வள்ளி குகையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.


அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். அப்போது, வள்ளி குகை அருகே மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.