காட்டுமன்னார்கோயிலில் பதிவான வாக்குகளை மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:-


நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தனி தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் போட்டியிட்டேன். 89 வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கலியமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் நாளன்று கோளாறு ஏற்பட்டது. அஞ்சல் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என திருமாவளவன் புகார் தெரிவித்துள்ளார். 


காட்டுமன்னார்கோயிலில் உள்ள அந்த தொகுதிக்கு உட்பட்ட கலியமலை 81வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.