முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமாக வேண்டும் என தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்று அதிமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். 


பிறகு நிருபர்களுக்கு அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி பல்வேறு வதந்திகள் பரவியுள்ளது. அதனால் அவர் உடல்நிலை பற்றி அரசு சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக முதல் - அமைச்சரை நேரில் சந்திக்க இன்று நான் மருத்துவமனைக்கு வந்தேன்.


அவர்க்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு சென்றேன். ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை என்னால் நேரில் சந்திக்க இயலவில்லை. அங்கு அதிமுக மூத்த தலைவர்கள் இருந்தனர். அவர்களுடன் பேச முடிந்தது. அவர்களிடம் முதல்வரின் உடல் நலம் பற்றி விசாரித்தேன்.


அவர்கள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா நன்றாக குணம் அடைந்து வருவதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் என்னிடம் உறுதிபட தெரிவித்தனர். அவர் விரைவில் குணம் அடைய விடுதலை சிறுத்தைகள் சார்பில் மீண்டும் வாழ்த்துகிறேன். நான் இங்கு வந்ததில் வேறு எந்த குறிக்கோளும் இல்லை.


எப்படி கருணாநிதி மற்றும் மூப்பனார் மருத்துவமனைகளில் இருந்தபோது நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனோ, அது போல இன்றும் நம் முதல்வர் ஜெயலலிதாவை காண வந்தேன். என திருமாவளவன் கூறினார்.