தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் இடம் மாற்றம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தற்போது தற்காலிகமாக தான் மூடப்பட்டுள்ளது, ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்! 


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர்.  


இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை செய்து வருகிறார்.


இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் ஆகிய இருவரையும் பணி இடம் மாற்றம் செய்துள்ளனர். துணை வட்டாட்சியர் கண்ணனை கயத்தாறுக்கும், சேகரை ஸ்ரீவைகுண்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.