தமிழகம், புதுச்சேரியில் அக்டோபர் 26, 27ல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கேரளா மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடற்கரை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து இரண்டு நாள்கள் பலத்த அல்ல மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது. 


இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறுகையில்...! 


தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் அக்டோபர் 26, 27 ஆம் தேதியில் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேலும், சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.