கந்துவட்டி புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலாவை நேற்று கைது செய்தனர். கைதான இவர் இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டில் ஆஜரான இவர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா. சில நாட்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ வைத்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டனர். 


இதைதொடர்ந்து இதுகுறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் நெல்லை மாவட்ட ஆட்சியரையும் போலீசாரையும் கிண்டல் செய்யும் வகையில், கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதையடுத்து கந்துவட்டி குறித்து அவதூறு பரப்புவதாக கூறி கார்ட்டூனிஸ்ட் பாலா போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் நெல்லை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலா ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.