தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்-அமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நடக்கிறது. 


இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைகளுக்கும் எவ்வளவு  நிதி ஒதுக்கீடு செய்வது, இலவச திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார்கள்.