மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென கோரிக்கையுடன் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி (PM narendra Modi) மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதற்காக சில குழுக்களும் அமைக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸடாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 


மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்திட , மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் உறுதி அளித்தார்.



 


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27.1.2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில்,  இம் மருத்துவமனை கட்டுமான பணிக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கான நிலமும் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்கான நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும்” என்று அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 


ALSO READ: இன்றைய கொரோனா நிலவரம்: தமிழகத்தில் 22,651 பேருக்கு தொற்று பாதிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR