சென்னை: ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தனது பாதுகாப்புக்காக 10 பாடிகார்டுகளை புதிதாக நியமித்துள்ளார் ஓ. பன்னீர்செல்வம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொண்டர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருக்கிறது. 
பல்வேறு தலைவர்களும் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் இந்த கூட்டத்திற்குள் சமூகவிரோதிகள் இடையூறு செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 


முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எளிமையானவர் என்றாலும் கூட தற்போது நிலைமை சரியாக இல்லை என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அவரது நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள் தொடர்ந்து அவரை வலியுறுத்தி வருகின்றனர். 


இதனால் தற்போது முதல்வரின் பாதுகாப்புக்காக புதிதாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட முறையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை ஓ. பன்னீர்செல்வம் தரப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


இதேபோன்ற தனிநபர் பாதுகாப்பு ஏற்பாடுகளை, ஓ. பன்னீர்செல்வத்தின் குடும்ப உறுப்பினர்களும் செய்துகொண்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக, இந்த பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பாதுகாப்புக்காக 10 பாடிகார்டுகளை புதிதாக நியமித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.