ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது:- 


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடையாக உள்ள சட்ட விதிகளை நீக்க வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்கு ஏதுவாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். 


ஜல்லிக்கட்டு தமிழக மக்களின் கலாச்சாரத்துடனும் சமயத்துடனும் பின்னிப் பிணைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது தமிழக மக்களுக்கு கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என கடிதத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் என குறிப்பிட்டுள்ளார்.