கடந்த நவம்பர் 11 ஆம் தேதியன்று ஓசூர் காவல்நிலையத்தில் அளித்த சங்கர் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் எனது சகோதரர் நந்தீஷ் மற்றும் அவரது மனைவி சுவாதி இருவரும் உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி சென்றனர். ஆனால் கடந்த சில தினங்களாக அவர்களை காணவில்லை. இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்று புகாரில் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சங்கரின் புகாரை அடுத்து காவல் துறை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தது. கடந்த நவம்பர் 13 ஆம் தேதி அழுகிய நிலையில் நந்தீஷின் உடலை சிவனசமுத்ர பகுதியில் காவல் துறையினர் மீட்டனர். அடுத்து இரண்டு நாளில் சுவாதியின் உடல் காவிரி நதிக் கரையில் ஒதுங்கி இருப்பது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இரண்டு உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 


கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பதினர் 3 பேரை (அப்பா சினிவாஸ், பெரியப்பா வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணன்) கைது செய்துள்ளது காவல்துறை, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.


வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நந்தீஷ் இருவரும் காதலித்து வந்தனர். இது பற்றி அறிந்த இரு வீட்டார் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பை மீறி சுவாதி-நந்தீஷ் திருமணம் செய்துக்கொண்டனர். நந்தீஷ் தான் வேலை பார்க்கும் ஓசூருக்கு அருகே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வந்ததால் இருவரையும் சுவாதி வீட்டினர் ஆசை வாரத்தை காட்டி அழைத்துள்ளனர். அவர்களின் மீது நம்பிக்கை வைத்து சுவாதி-நந்தீஷ் சென்றுள்ளனர். அதன்பிறகு பிணமாக தான் மீட்டெடுத்தனர். 


மாற்று சமுதயத்தை சார்ந்த இருவர் திருமணம் செய்ததால், ஆத்திரமுற்ற சுவாதியின் உறவினர்கள தம்பதிகளை கடத்திச்சென்று ஆணவக்கொலை செய்துள்ளது. இச்சம்பவம் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.