Delta Plus variant: கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அடுத்து, டெல்டா பிளஸ் (Delta Plus variant) குறித்த அச்சங்கள் அனைவரது மனங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. இது குறித்த பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த டெல்டா பிளஸ் வைரஸ் (Delta Plus Variant) மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருகிறது. இந்த வைரஸ் நுரையீரல் அணுக்களுடன் எளிதாக தாக்கக்கூடியது. இந்தியாவில் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.


ALSO READ: Black Fungus: கருப்பு பூஞ்சை சிறப்பு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது


இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் (Tamil Nadu) இதுவரை 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 


முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 22), சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் டெல்டா ப்ளஸ் திரிபு பரவல் கவலை அளிக்கு விஷயம் கூறியது. இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம், அறிவுறுத்தல்களை வெளியிட்டு, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும், இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தது. 


ALSO READ: New COVID-19 variant: புதிய டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR