சென்னை: தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே கடுமையாக அதிகார சண்டை நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டிஜிபி ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ள பிளவால் தமிழக போலீசார், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் இடையே எப்படி செயலாற்றுவது என்பது குறித்து குழப்பம் காணப்படுகிறது. 


இந்நிலையில், தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை ஈடுபட்டுள்ளார். ஆலோசனையில் காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.