தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றும், தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்தும், அதற்க்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் தமிழக தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். 


அப்பொழுது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தமிழகத்தில் தேர்தல் நடத்துவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஏற்ப்பட்டுள்ள போராட்டத்தால் சட்டம் ஒழுங்கில் எந்தவித பாதிப்பும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதில் சிக்கல் இல்லை. தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தலாம். தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 31 ஆம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.