தமிழக சட்டசபைத் தேர்தலில் (TN Assembly Election 2021) போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்  செய்வதற்கான கால அவகாசம்  இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில்,  இது வரை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட  5000திற்கும் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.  வேட்பு மனுக்களை வாபஸ் பெற 22ஆம் தேதி கடைசி நாளாகும்.  அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளிடப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம், புதுச்ரேி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து தான் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.


கரூர் சட்ட பேரவைத் தொகுதியில், அதிக பட்சமாக 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக 59 பேர் போட்டியிடுகின்றனர்.  முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி ( Edappadi K Palanisamy) போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 41 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 


தேர்தல் நடக்க சுமார் 3 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதிகமுக, திமுக தவிர, இந்த தேர்தலில், பாஜகவும் முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளதால், இந்த தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்புகளை கொண்ட வித்தியாசமான தேர்தலாக உள்ளது என்றால் மிகையில்லை. 


ALSO READ | TN Election 2021: மதுவிலக்கை அமல்படுத்துவதே இலக்கு என தேர்தல் அறிக்கையில் கமலஹாசன் சூளுரை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR