இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருவதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர்  மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அக்கடிதத்தில் கூறியதாவது:- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 மீனவர்களையும், தமிழக மீனவர்களின் 101 விசைப் படகுகளையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இலங்கை கடற்படையினரின் தொடரும் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மேலும் தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நலன்கள், உரிமைகள்  பாதுகாக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.