சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ற ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிப் பாதுகாப்பு, அரசு சுகாதார மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் மாநிலம் முழுவதும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், சென்னை தலைமைசெயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மருத்துவ கல்வி இயக்குநர், சுகாதார இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


தமிழக அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.