சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன கூடிய ஊரடங்கு ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு வரும் திங்கள் (ஜூலை 12 ஆம் தேதி) காலை நிறைவடையும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கு ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். 


இன்று அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிப்பின் முக்கிய அம்சங்களைப் பற்றி இங்கே காணலாம்:


- தமிழகம் (Tamil Nadu) முழுவதும் உள்ள கடைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


- தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


- உணவகங்கள், தேநீர் கடைகள் பேக்கரிகள் இரவு 9 மணி வரை 50 % வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி உண்டு.


- திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்குகொள்ள வேண்டு என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.


- இறுதிச்சடங்கில் 20 பெர் மட்டுமே பங்கேற்க வெண்டும் என்ற கட்டுப்பாடும்  தொடர்கிறது


- பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வர இ பதிவு (E Pass) முறை தொடரும் என அரசு தெரிவித்துள்ளது.


- மத்திய மாநில அரசு தேர்வுகளுக்கான தேர்வுகளை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


- மாநிலங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை.


ALSO READ: லியோனி பதவியேற்பு நிகழ்ச்சி திடீர் ரத்து; காரணம் என்ன..!!


- திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 


- மதுக்கூடங்கள், சமுதாய, அரசியல் கூட்டக்கள், கலை, கலாச்ச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.


- பள்ளிகள், கல்லூரிகள், கவ்லி நிறுவனங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றை திறக்க தடை தொடர்கிறது.




கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்


- கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.


- கொரோனா விதிமுறைகளை (Corona Guidelines) மீறுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


- பொது இடங்களில் முகக்கவசங்கள், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது அவசியம்


- நோய் தொற்று அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும்.


இதற்கிடையில், நேற்று தமிழ்நாட்டில் 3,039 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,13,098 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 180 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 69 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,224 ஆக இருந்தது. 


திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்று எண்ணிக்கையில் சிறிய ஏற்றத்தைக் காண முடிந்தது. 


ALSO READ: Ration Card முக்கிய செய்தி: ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR