தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன் அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இன்று வானிலை ஆய்வு மையம் (Meteorological Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிளும் கனமழை தொடருவதால் அணைகள் நிரம்பி உள்ளன. இதை அடுத்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது 


இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வேலூர், திருப்பத்தூர், அரியலூர், மதுரை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தில் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


ALSO READ | தமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்


ALSO READ | இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


மேலும், நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.