தென் தமிழகத்தில் நிலப்பரப்பில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இதே பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை அல்லது சூறாவளி காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் 5 செ.மீ மழையும்,திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 4செ.மீ மழையும், தேனி சுற்று வட்டார பகுதிகளில்  3 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன்  காணப்படும் எனவும், அதிகப்படியாக 37டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்சமாக 29டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.