தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்வுக்கான முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. 


அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேர்விற்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும். 


தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-


> www.tnresults.nic.in


> www.dge1.tn.nic.in


> www.dge2.tn.nic.in


ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.


மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.