தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் ஏற்காடுதெருவைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரும் நாகர்கோவிலைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவர கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணை வீட்டுச்சிறையில் வைத்திருந்தனர். இந்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண் வீரமுத்துவை கடந்த 12ஆம் தேதி திருமணம் செய்திருக்கிறார். திருமணம் முடிந்த கையோடு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து சாயர்புரம் வந்த பெண்ணின் உறவினர்கள் வீரமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு காதலர்கள் இல்லாமல் போனார்கள். கொலைவெறி தாக்குதலை நடத்த திட்டமிட்டு வந்தவர்கள் வீரமுத்து இல்லாததால் அதை அவரது தம்பி நாகராஜன் மீது காட்டியிருக்கிறார்கள். மறைத்து வைத்திருந்த கத்தியால் வீட்டிலிருந்த நாகராஜனை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பித்துச் சென்றனர். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நாகராஜனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.   


மேலும் படிக்க | வாயில் சோற்றை அமுக்கி பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த கொடூரம்..!


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR