திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழக தலைவர்கள் ஒன்று கூடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

H. ராஜா பதிவியிட்டு இருந்த கருத்தை பின்னர் அதனை நீக்கிவிட்டார். மேலும் இன்று பெரியார் சிலை அகற்றப்படும் என்ற பதிவை என் அனுமதி இல்லாமல் அட்மின் முகநூலில் பதிவு செய்துவிட்டார் என ஹெச்.ராஜா விளக்கம் கொடுத்துள்ளார்.


இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், 


"பெண்ணடிமையை, சாதியை, மூட நம்பிக்கைகளை உடைத்த இரும்பு மனிதர் பெரியார்.! அவரின் சிலைகள் அப்புறப்படுத்தபடும் என்று சொன்னது வன்மையான கண்டனத்துக்குரியது"


 



 


என்று கூறியுள்ளார்.