சென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,078 பேருக்கு பாதிப்பு. அதேநேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,310 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 67 பேர் மரணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1456 ஆக உயர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை வெளியிடப்பட்ட அரசாணையில் 1089 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைவிட தற்போது 367 பகுதிகள்  அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 450 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஒரே நாளில் 360 பேருக்கும் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 328 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம், தமிழ்நாட்டில்  இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.