சென்னையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பனி மூட்டம் காரணத்தால் சென்னை வரும் 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம் அருகே பொத்தேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது.


கடும் பனிமூட்டத்தால் சென்னையில் தரையிறங்க முடியாமல் சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன. லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.