இன்று தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் செல்லவிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சசிகலாவுக்கும், ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே நடைபெறும் அதிகாரப் போட்டி காரணமாக, தமிழக அரசியல் களம் பல்வேறு குழப்பங்களை சந்தித்து வருகிறது.


சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தொடர்ந்து அதிமுக எம்.பி.,களும், எம்.எல்.ஏ.,க்களும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்திற்கு செல்ல இருப்பதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளது, சசிகலா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதனால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் முறையாக தலைமை செயலகம் வருவார் என கூறப்படுகிறது.