தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளது. மத்திய அரசின் அனுமதிப்படி இந்த சுங்கச் சாவடிகளின் கட்டணம் ஆண்டுக்கு 10 முதல் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி இந்த வருடம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதேபோல் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய சாலைகளில் சுங்கச் சாவடிகளில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது.


இந்நிலையில் தற்போது பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10% கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.