நாளை டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மகாராஷ்டிராவில் அமைத்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். ஏற்கனவே டில்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க இயலவில்லை. ஆனால் தற்போது அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. 


இதனால் இன்று மாலை மகாராஷ்டிராவில் இருந்து டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம், நாளை காலை 11 மணி அளவில், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என தெரிகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.