சென்னை: அதிமுக கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக அதிமுக பொதுக் குழு கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் பதவியுடன் சேர்த்து அதிமுக-வின் தலைமை பொறுப்பும் சசிகலாவிடமே வழங்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை தொடர்ந்து சசிகலா இன்று மாலை 4 மணி அளவில், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். 


அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்கும் விழா, நாளை காலை 11 மணிக்கு ராயப் பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. 


இந்த விழாவில் புதிய பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்த விழால் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.