ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் இன்று டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், பல மாத விசாரணைக்குப் பிறகு ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு சின்னத்தையும் பெயரையும் ஒதுக்கி உத்தரவிட்டது.


இதை எதிர்த்து தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டி இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.