முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள், 95% பேர் தங்கள் பக்கம் தான் இருப்பதாக, அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.,தினகரன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதுதொடர்பாக தெரிவிக்கையில்... "இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" என தெரிவித்தார். மேலும் இரட்டை இலையை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என தாங்கள் கேட்கவில்லை எனவும், தங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று தான் வழக்கு தொடுத்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.


சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்க கூடாது என கூறியவர்களுடன், தற்போது அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது. ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், 95% பேர் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து ‘தேர்தல் களத்தில் அ.ம.மு.க., இல்லை என, அ.தி.மு.க., கூறி வருவது’ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், "ஆர்.கே நகர் தேர்தலின் போதும், இதுபோன்று தான் தெரிவித்தனர், அதேபோல், தேர்தலுக்கு பின்னர் முடிவு தெரிய வரும், தேர்தல் முடிவுகள் வரும்போது பேசுவோம்" என தெரிவித்தார்.


மேலும், "வெற்றியோடு மதுரைக்கு வருவேன்; அ.தி.மு.க., கூட்டணி பற்றி அன்புமணி ராமதாஸ் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், அது மானங்கெட்ட கூட்டணி" என்றும் கடுமையாக விமர்சித்தார்.