அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் இன்று அதிமுக தொண்டர் ஒழுங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மதுரையில் தினகரனுக்கு ஆதரவாக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் புதிய அமைப்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தினகரன் மீது பொய் வழக்கு போடும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பொய் வழக்கை ரத்து செய்து தினகரனை விடுதலை செய்ய வேண்டும்.


தினகரவை காக்க அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்துள்ளோம். தினகரனுக்கு எதிராக வஞ்சகமாக தொடுக்கப்படும் அரசியல் சூழ்ச்சிகளையும், சதிகளையும் கண்டித்தும், அதிமுக தொண்டர்கள் தினகரன் பக்கம்தான் என்பதை உணர்த்தவும் இன்று மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தெரிவித்தனர்.