கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் போலீசாரிடம் புகார் அளித்தனர்.


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (Rajendra Balaji) மீது ரூ 3 கோடி வரை மோசடி புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் 


ராஜேந்திர பாலாஜி அமைச்சர் தொடர்பில் பேசிக் கொண்டிருந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ALSO READ | ராஜேந்திர பாலாஜிக்கு செக்: விரைவில் கைது செய்வோம்- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 


திருப்பத்தூரை அடுத்த அக்கரகாரம் பகுதியை சேர்ந்த அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரை விருதுநகர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



ஏழுமலை



விக்னேஸ்வரன்


ஏற்கனவே பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையில், தற்போது, கைதாகியுள்ள விக்னேஸ்வரன் மற்றும் ஏழுமலை ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கிருஷ்ணகிரி, வேலூர், பகுதியில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தெரிய வந்துள்ளது. 


ALSO READ | இறுகும் பிடி! ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR