ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கடல் வழியாக, கள்ள படகு மூலம் இலங்கைக்கு தப்ப முயன்ற இரண்டு அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற சாயிசன், ஜெயக்குமார் என்னும் இரண்டு பேரினை மண்டபம் சட்டவிரோத தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



இவர்கள் இருவரும் விழுப்புரம் அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர்கள் எனவும், இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.